Yuvan Shankar Raja: ‘20 லட்சம் பாக்கி சாமி.. வாடகையே தரல.. எஸ்கேப் ஆக ட்ரை பண்றார்’ -யுவன் மீது காவல்நிலையத்தில் புகார்!
Yuvan Shankar Raja: 2 வருடங்களாக சென்னை நுங்கம்பாக்கம் லேக் பகுதியில் இருக்கும் எனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். - யுவன் மீது புகார்!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டு இருக்கிறது.
யுவன் மீது பரபரப்பு புகார்!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் பகுதியில் வசித்து வந்தார்.இந்த வீடு அஜ்மத் பேகம் என்பவருக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவரது சகோதரர் முகமது ஜாவித், யுவன் மீது திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார்.
அந்த புகாரில், “ இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கடந்த 2 வருடங்களாக சென்னை நுங்கம்பாக்கம் லேக் பகுதியில் இருக்கும் எனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். அவர் என்னுடைய சகோதரிக்கு 20 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்திருக்கிறார். இது குறித்து என்னுடைய சகோதரி கேட்கும் போதெல்லாம் யுவன் அதனை தர மறுத்து வந்திருக்கிறார்.