Mansoor Ali Khan: த்ரிஷா விவகாரத்தில் நடிகர் மன்சூருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..தடைவிதிக்க கோர்ட் மறுப்பு!
நடிகை த்ரிஷாவை விமர்சித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

நடிகைகள் த்ரிஷா, குஷ்பூ ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில், "தற்போது உள்ள இயக்குநர்கள் கதாநாயகிகளிடம் நெருங்கி நடிக்க விடுவதில்லை. லியோ படத்தில் த்ரிஷாவை நான் கண்ணால்க்கூட பார்க்கவில்லை. அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும் என்று நினைத்தேன். த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இல்லை. நடிகை த்ரிஷாவை, பழைய படங்களில் குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல, தூக்கிப்போட வாய்ப்பு கிடைக்கவில்லை." என்று பேசியிருந்தார்.