Pudhumai Pithan: பல கெட்டப்பில் தோன்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்த எம்ஜிஆர்!கருணாநிதி எம்எல்ஏவான பின் எழுதிய முதல் கதை
இளவரசனாக வரும் எம்ஜிஆர் பாம்பாட்டி, மந்திரவாதி, முகமூடி வீரன், பெண் பல கெட்டப்பில் தோன்றி வாள் சண்டை, குதிரையேற்றம் என ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி எம்எல்ஏ ஆன பிறகு கதை, வசனம் எழுதி ய முதல் படமாக புதுமைப்பித்தன் உள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களான மு. கருணாநிதி - எம்ஜிஆர் கூட்டணியில் உருவாகி ரசிகர்களை கவர்ந்த மற்றொரு வெற்றி படம் புதுமைப்பித்தன். திமுகவில் முக்கிய தலைவராக இருந்த மு. கருணாநிதி அரசியல், சினிமா என இரண்டிலும் முழுவீச்சில் ஈடுபட்டு நேரத்தில், அவர் முதல் முதலாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு ஆனபிறகு கதை, வசனம் எழுதிய படம் புதுமைப்பித்தன் அமைந்தது.
வழக்கமான ஆள்மாறாட்டம், எதிரிகளை வீழ்த்தும் ஹீரோ என்கிற கதையை மன்னர் கால கதையமைப்பில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பார்கள். மு. கருணாநிதி கதை, வசனம் எழுத படத்தை டி.ஆர். ராமண்ணா இயக்கியிருப்பார்.
எம்ஜிஆர், டி.எஸ். பாலையா, ஜே.பி. சந்திரபாபு, டி.ஆர். ராஜகுமாரி, பி.எஸ்,.. சரோஜா, ஈ.வி. சரோஜா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்