Meera Mithun: நடிகை மீரா மிதுன் மாயம்; கண்டுபிடித்து தருமாறு தாயார் புகார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Meera Mithun: நடிகை மீரா மிதுன் மாயம்; கண்டுபிடித்து தருமாறு தாயார் புகார்

Meera Mithun: நடிகை மீரா மிதுன் மாயம்; கண்டுபிடித்து தருமாறு தாயார் புகார்

Aarthi V HT Tamil Published Oct 22, 2022 12:52 PM IST
Aarthi V HT Tamil
Published Oct 22, 2022 12:52 PM IST

நடிகை மீரா மிதுனை காணவில்லை என அவரின் தாயார் சியமாளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மீரா மிதுன்
மீரா மிதுன்

அது மிகப் பெரிய சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் மீரா மிதுனுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 

 இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மீரா மிதுன் ஆஜராகவில்லை. தொடர்ந்து இரண்டு முறை நீதிமன்றத்தில், மீரா மிதுன் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. 

மீரா மிதுன் தனது செல்போன்  எண்னை அனைத்து வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில்  மீரா மிதுன் தாயார் ஷியாமலா நேற்று மாலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அதில், ”கடந்த சில நாட்களாகவே மீரா மிதுன் எங்களுடன் தொடர்பில் இல்லை. வழக்கை சந்தித்து வந்தபோதிலும், தொடர்ந்து எங்களிடம் தொடர்பில் இருந்தார். ஆனால் சில நாட்களாக தொலைபேசியிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.