தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Meena Got Angry Against Second Marriage Question

Meena: ஹீரோயினாக இருந்தால் மட்டும் ஏன் எப்படி? - மறுமணம் கேள்வியால் கடுப்பான மீனா

Aarthi V HT Tamil
Jan 06, 2024 10:55 AM IST

நடிகை மீனா தனது மறுமணம் தொடர்பாக பேட்டி அளித்தார்.

மீனா
மீனா

ட்ரெண்டிங் செய்திகள்

அப்படி ஒருவர் தான் நடிகை மீனா; இவர் சிவாஜி , ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் .

1990 ல் தெலுங்கில் ' நவயுகம்' என்ற படத்தின் மூலம் 15 வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு மீனாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அஜித்துக்கு ஜோடியாக விஜயகாந்த், ரஜினி, கமல் ஹாசன், பிரபு, சரத்குமார், சத்யராஜ், முரளி, கார்த்திக், மீனா, சிட்டிசன், வில்லன் என தமிழ் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மீனா, விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடித்துள்ளார்.

தென்னிந்திய விழாக்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த மீனா , 40 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாமல் நடித்து வருகிறார். புதிய கதாநாயகிகளின் வருகையால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிய பிறகு 2009 ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இப்போது அவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் , தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் மீனாவின் கணவர் 2022 ஆம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வித்யாசாகரின் மறைவுக்கு பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கணவர் இறந்த பிறகு மெல்ல மெல்ல நினைவிலிருந்து வெளியே வந்த மீனா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது தமிழில் 'ரவுடி பேபி' படத்திலும் , மலையாளத்தில் 'அனந்தபுரம் டைரி' படத்திலும் நடித்து வருகிறார். 

கணவர் இறந்த பிறகு மீனா தனியாக வசித்து வருவதால் மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த கேள்விக்கு மீனா ஒரு பேட்டியில் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து மீனா கூறியதாவது, ஒரு ஹீரோ தனிமையில் இருந்தால், அவரை பற்றி அவதூறான வதந்திகள் பரவுவதில்லை.அதுவும் ஒரு ஹீரோயின் கணவனை இழந்து தனிமையில் இருந்தால் தான்.

கணவனை இழந்து தனிமையில் இருப்பவர்கள் ஏராளம். தனியாக வாழ முடியும். எனக்கு இரண்டாவது திருமணம் பற்றி கவலை இல்லை. எந்த யோசனையும் இல்லை. என் கவனமெல்லாம் என் மகள் நைனிகா மீது தான் உள்ளது" என தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்