Manickam Narayanan: ‘முதல்ல காச திருப்பிக்கொடு..ஜென்டில் மேன்னா நடத்தையில காமி அஜித்..’ - மாணிக்கம் நாராயணன்
Manickam Narayanan: “ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உன்னை போல சாதித்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது நான் கிழித்து விட்டேன்…சாதித்து விட்டேன்... கோழி பிரியாணி வைத்தேன்..ஆடு பிரியாணி வைத்தேன்…” - மாணிக்கம் நாராயணன்

தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித் குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, “அஜித் தன்னை தானே சுயம்பு என்று சொல்லிக் கொள்கிறார். சினிமாவில் யாருடைய உதவியும் இல்லாமல் மேலே வந்து கிழித்து விட்டேன் என்கிறார்.
அஜித் சாதிக்க வில்லை
அப்படி பார்த்தால் சிவாஜிக்கு யார் பின்னால் இருந்து உதவினார்கள். கமல்ஹாசனுக்கு, ரஜினிகாந்திற்கு அவர்களது குடும்பம் சினிமாவில் மேலே வர உதவியதா என்ன... ஒரு சில சினிமா கலைஞர்களுக்கு அவர்களது குடும்பம் பின்னணியாக இருந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அஜித், தான் சாதித்து விட்டதாக சொல்லிக் கொள்கிறார். அப்படி என்ன நீ சாதித்து விட்டாய்... உன்னை போல் சாதித்தவன் 100 பேர் இருக்கிறார்கள்..
ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உன்னை போல சாதித்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது நான் கிழித்து விட்டேன்…சாதித்து விட்டேன்... கோழி பிரியாணி வைத்தேன்..ஆடு பிரியாணி வைத்தேன்… என்று சொல்லிக்கொள்கிறார். என்னடா பண்றீங்க.. நான் கூடத்தான் நன்றாக சமைப்பேன்.. ஆனால் எனக்கு பிரியாணி வைக்க தெரியாது. காரணம் என்னவென்றால் நான் ஆடு கோழிகளை வெட்டுவதில்லை; யார் வேண்டுமென்றாலும், தன்னுடைய மனைவிக்காக சமைக்கலாம் அதில் என்ன தவறு கிடையாது.