‘அப்பாவின் தியாகம் மறைக்கப்படுகிறது’ -கவிஞர் வைரமுத்து ‘நச்’!
Vairamuthu: ‘கலைஞரின் பேரனுக்கு பாட்டு எழுதுகிறோம் என்கிற போது, என் தமிழ் நொண்டியடித்துக் கொண்டிருந்த என் மொழி, இவருக்கு பாட்டு எழுதுகிறேன் என்றதும் முண்டியடித்து வந்தது’

திருவின் குரல் படம் தொடர்பான இணையதள பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
‘‘அப்பா பாடல் வெற்றி பெற்றது என்றால், அதற்கு அப்பா தான் காரணம். அப்பா என்ற உறவு பெரும்பாலும் கண்டிப்பானது. அம்மா என்ற உணர்வு கனிவானது. அம்மா அணைத்து அன்பு செலுத்துவாள். அப்பா அடித்து அன்பு செலுத்துவாள். அம்மா என்றால் கண்ணீர் வரும். அப்பா என்றால் பயம் வரும். அந்த பயம் தான் சமூக ஒழுக்கம். நம்முடைய மரபு, நம்முடைய நெறி. இந்த பயத்தின் காரணமாகவே அப்பாவின் தியாகம் மறக்கப்பட்டுவிடுகிறது.
அப்பாவின் வலி பெரிது. அப்பா என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதை நான் அப்பா ஆன பிறகு தான் கண்டுகொண்டேன் என்று என் மகன் கூறினான். என் மகனை நான் தூக்கி நெறிப்படுத்துவது, அறிவூட்டுவதிலிருந்து எனக்கு தெரிந்தது, நீங்கள் எவ்வளவு வலியை சுமந்திருப்பீர்கள் என்று என் மகன் கூறினான்.