எவ்வளவு தான் பொறுமை காப்பது.. மானமுள்ளவன் தெருவில் இறங்குவான்.. பொங்கிய வைரமுத்து
தூர்தர்ஷன் தொலைக்காட்சி விழாவில் பாடப்பட்ட தமிழ்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடம் குறித்த பாடல் வரி தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பாடலாசிரியர் வைரமுத்து காட்டமாக பேசியுள்ளார்.

எவ்வளவு தான் பொறுமை காப்பது.. மானமுள்ளவன் தெருவில் இறங்குவான்.. பொங்கிய வைரமுத்து
சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தி மாதம் கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சென்னை தொலைகாட்சி பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த விழாவில் தமிழ்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
விடுபட்ட தமிழ்த்தாய் வாழ்த்து வரி
அங்கு இசைக்கப்பட்ட பாடலில் தெக்கணமும் அதில் சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரி விடுபட்டது. இந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ரவி வேண்டுமென்றே திராவிடம் என்ற வார்த்தையை பயன்படுத்த விடாமல் தடுத்துள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்,
கருத்து தெரிவித்த வைரமுத்து
இதுகுறித்து பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து மிகக் காட்டமான ஒரு பதிவை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.