Ponniyin Selvan: இழுத்தடித்த லைகா… முகநூல் பதிவால் நடிகருக்கு தேடி வந்த சம்பளம்
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த மூத்த நடிகர் காத்தாடி ராமமூர்த்திக்கு ஒரு வழியாக சம்பளம் வழங்கப்பட்டது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் இந்திய அளவில் இந்த படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தில் குடந்தை ஜோதிடர் வேடத்தில் காத்தாடி ராமமூர்த்தி நடித்து இருந்தார். படத்தின் நீளம் கருதி அவரது காட்சிகள் நீக்கியுள்ளதாக தெரிகிறது.
இதை எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். தொடர்ந்து அவருக்கு சம்பள பணத்தை லைகா நிறுவனம் வழங்கவில்லை என கூறினார். இது பெரும் சர்ச்சையாக மாறியது.
இந்நிலையில் லைகா நிறுவனம் தற்போது ஜோதிடர் வேடத்தில் நடித்த காத்தாடி ராமமூர்த்திக்கு சம்பளம் அளித்து உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பட்டுக்கோட்டை பிரபாகர் தனது முகநூல் பதிவில் “நீளம் கருதி நீக்கப்பட்ட காட்சிகள் அவருடைய வையும் சிக்கின.அதை வருத்தத்துடன் பகிர்ந்ததோடு தன் உழைப்புக்கான ஊதியமும் கிடைக்கவில்லை என்பதையும் தெரிவித்தார்.
அதை ஒரு பதிவாக்கினேன்.நேற்று காத்தாடி சாரை உரத்த சிந்தனையின் விழாவில் சந்தித்தபோது முக மலர்ச்சியுடன் தொகை வந்தது என்று நன்றி சொன்னார்.கவனத்திற்கு வந்ததும் நடவடிக்கை எடுத்த லைகா நிறுவனத்திற்கு நன்றி” என குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்