Kushboo: மாமியாருடன் நடக்கும் சண்டை.. கணவர் சுந்தர். சிக்கு கண்டிஷன் போட்ட குஷ்பு!
Kushboo: கல்யாணத்துக்குப் பிறகு அம்மா எங்களோட இருக்கட்டும்னு என் கணவரிடம் சொன்னேன். கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றார்.

மாமியாருடன் நடக்கும் சண்டை.. கணவர் சுந்தர். சிக்கு கண்டிஷன் போட்ட குஷ்பு
ரசிகர்களின் அபிமான நடிகை குஷ்பு தனது கேரியருடன் குடும்ப வாழ்க்கைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். குஷ்பு இயக்குனரும், நடிகருமான சுந்தர். சியை திருமணம் செய்து கொண்டார்.
குஷ்பு தனது கணவரைப் பற்றி பல பேட்டிகளில் பேசியுள்ளார். குஷ்புவுக்கும், சுந்தர்.சிக்கும் கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நட்சத்திர தம்பதிக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது குஷ்பு தனது மாமியார் பற்றி பேசி உள்ளார்.
அவர் கூறுகையில், ”கல்யாணத்துக்குப் பிறகு அம்மா எங்களோட இருக்கட்டும்னு என் கணவரிடம் சொன்னேன். கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றார். பரவாயில்லை என்றேன். என் மாமியார் போதும், என் குழந்தைகளும் என் கணவரும் போதும் என்று நான் நினைக்கவில்லை.