தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivakarthikeyan:‘சூரியுடன் இணைவதில் உற்சாகம்’-கொட்டுக்காளி குறித்து சிவா பேட்டி!

Sivakarthikeyan:‘சூரியுடன் இணைவதில் உற்சாகம்’-கொட்டுக்காளி குறித்து சிவா பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 10, 2023 01:39 PM IST

எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்த படத்தில் பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும், அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது

சிவகார்த்திகேயனுடன் இணையும் சூரி
சிவகார்த்திகேயனுடன் இணையும் சூரி

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறும்போது, ​​“ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த மண்ணின் கூறுகளை அதன் தன்மை மாறாது படமாக்கி, அது சர்வதேச அளவுகளில் அங்கீகாரம் பெறுவது திரைப்படத்துறையின் விலைமதிப்பற்ற தருணம்.

அந்த வகையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க டைகர் விருதை வென்று, 'கூழாங்கல்' திரைப்படத்தின் மூலம் நம் தமிழ்த் திரையுலகைப் பெருமைப்படுத்திய இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ் ஒரு ஜெம் என்று சொல்வேன்.

எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்த படத்தில் பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும், அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கூறும்போது, ​​“திரைப்படத்துறையில் அனுபவம் மிக்கவர்களுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சூரி மற்றும் அன்னா பென் போன்ற மிகவும் திறமையான நடிகர்களுடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது". என்றார்.

இணைத் தயாரிப்பாளர் கலை அரசு கூறும்போது, ​​“'கூழாங்கல்' படத்தில் இயக்குநர் வினோத்ராஜின் பணி எங்களுக்கு பிடித்திருந்தது. இப்போது, அவருடைய இயக்கத்தில் அடுத்தப் படத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், சூரி மற்றும் அன்னா பென் போன்ற திறமையான கலைஞர்கள் இந்த படத்தில் இணைந்திருப்பது எங்களை உற்சாகப்படுத்துகிறது. SK புரொடக்ஷன்ஸ் எப்போதும் நல்லப் படங்களைக் கொடுக்கவே ஆர்வம் காட்டி வருகிறது. அந்த ஆர்வத்திற்குத் தீனி போடும் வகையிலான நல்லதொரு திரைப்படமாக இது இருக்கும்". என்றார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்