kochi: மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
சில நிதி தொடர்பான விகாரங்கள் குறித்து மோகன்லாலிடம் ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ள சம்பவம் மலையாள திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் வீட்டிற்குள் நேற்று அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற அதிகாரிகள், மோகன்லாலிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணை விபரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டசோதனையின் ஒரு பகுதியாக மோகன்லால் வீட்டில் தற்போது சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. சில நிதி தொடர்பான விகாரங்கள் குறித்து மோகன்லாலிடம் ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அவரிடம் உள்ள வெளிநாட்டு சொத்துக்கள் நிதி பரிவர்த்தனைகள் குறித்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் கேரளாவில் ஏற்கனவே சோதனை நடத்திய மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், நடிகர் மோகன்லாலின் நெருங்கிய நண்பர் ஆவார். மோகன்லால் நடித்த லூசிபர், திரிஷ்யம், புலி முருகன் போன்ற படங்களை இவர் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி இருப்பது கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில மாதங்களுக்கு முன் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்வி ராஜ், வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ஆனால் அதில் கைப்பற்றப்பட்ட ஆணவங்கள் குறித்த தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போதுவரை வெளியிடவில்லை
டாபிக்ஸ்