Kayal Serial: திருமணம் முடிந்த கையோடு அடுத்த அதிரடி.. சபதம் எடுத்த கயல் - சிக்குவாரா பெரியப்பா?
Kayal Serial: என் திருமணம் முடிந்தவுடன் எனக்கு இருக்கும் அடுத்த பொறுப்பு என்னவென்றால் என் அப்பா விட்டு விட்டு சென்ற வேலையை முடிப்பது தான். கூடிய சீக்கிரமே என் அப்பா மேல் விழுந்த பழியையும், சூழ்ச்சி செய்த பகையையும் விரட்டி அடிப்பேன் என்றார் கயல்.

சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7. 30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் கயல். இந்த சீரியலில் இருந்து இன்று வெளியான புரோமோவில், “ கயல், “ அணைக்க முடியாத அக்னியா இருக்குற வைராக்கியம் தான் இதுக்கெல்லாம் காரணம். வைராக்கியமா எதுக்குமா என்று எழிலின் தந்தை கயலிடம் கேட்கிறார்.
அதற்கு கயல், " எங்க சொந்த ஊர்ல எந்த பாவமும் பாவமும் அறியாத எங்க அப்பா மேல ஒரு பொய்யான பழியும், பகையும் இன்னும் இருக்கு. நல்ல மனுஷன் ஆனா அவரு கலங்கடிக்கப்பட்டார். துரோகத்துல சரிஞ்சாரு. பொய்யும், பகையும் அவரை இந்த உலகத்திற்கு தப்பானவராக காட்டிவிட்டது. அவர் உயிரோடு இருக்கும்போதே தன் மேல் விழுந்த பழியை விரட்டி ஓட வைக்க வேண்டும் என்று நினைத்தார்.
சபதம் எடுக்கும் கயல்
ஆனால் அதற்கு அந்த இறைவன் வழி வகுத்து கொடுக்காமல், பதிலே எடுத்துக்கொண்டார். என் திருமணம் முடிந்தவுடன் எனக்கு இருக்கும் அடுத்த பொறுப்பு என்னவென்றால் என் அப்பா விட்டு விட்டு சென்ற வேலையை முடிப்பது தான். கூடிய சீக்கிரமே என் அப்பா மேல் விழுந்த பழியையும், சூழ்ச்சி செய்த பகையையும் விரட்டி அடிப்பேன். இது சத்தியம் “ என்றார்.