Jailer: பிரித்து மேயும் ஜெயிலர் வசூல்; 100 இதயங்களுக்கு 1 கோடி.. கலாநிதி மாறன் கொடுத்தனுப்பிய காசோலை!
ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் கிடைத்த வசூலில் 1 கோடி ரூபாய் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் 10 ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. திரைப்படம் 25 வது நாளை கடந்தும் தியேட்டருக்கு ஜெயிலர் படத்தை பார்க்க மக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தத்திரைப்படம் வசூலில் 500 கோடியை கடந்து விட்டதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. கொட்டும் வசூலால் மனம் குளிர்ந்து போன கலாநிதிமாறன் நடிகர் ரஜினிகாந்திற்கு 1.20 கோடி பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரையும், படத்தின் இயக்குநர் நெல்சனுக்கு 1.40 கோடி மதிப்புள்ள ‘Porsche’ காரை பரிசாக வழங்கினார்.
கூடவே இருவருக்கும் லாபத்தில் இருந்து தான் விருப்பப்பட்ட தொகையை காசோலையாகவும் கொடுத்தார். இந்த நிலையில் தன்னுடைய இசை மூலம் படத்தின் வெற்றிக்கும் பெருந்துணையாக அனிருத்திற்கு எதுவும் வழங்கப்படாதது குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.