உயிர் பிரிந்தது.. இறைவனடி சேர்ந்தாள் தீபா.. கதறி அழுத கார்த்திக்! - முடிவுக்கு வந்த கார்த்திகை தீபம் சீரியல்
பாடிக்கொண்டிருக்கும் போதே தீபாவின் உயிர் பிரிந்தது. அதைப்பார்த்த கார்த்திக் கதறி அழுதான்! - முடிவுக்கு வந்த கார்த்திகை தீபம் சீரியல்

உயிர் பிரிந்தது.. இறைவனடி சேர்ந்தாள் தீபா.. கதறி அழுத கார்த்திக்! - முடிவுக்கு வந்த கார்த்திகை தீபம் சீரியல்
தீபாவின் மறைவால் தவிக்கும் குடும்பம்.. கைதான கீதா, கார்த்திக் கொடுத்த வாக்கு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
உயிரை விட்ட தீபா
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மடியில் தீபா உயிரை விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தீபாவின் இறப்பை தாங்க முடியாமல், மொத்த குடும்பமும் கண்ணீரில் தத்தளிக்கின்றனர். அதன் பிறகு தீபாவை அடக்கம் செய்யும் வேலைகள் நடக்கின்றன. அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் தீபாவையும் பற்றியும் தீபா மருமகளாக வந்தது பற்றியும் கண்ணீருடன் பேசி கொள்கின்றனர். தீபாவின் பிரிவை தாங்க முடியாமல் அனைவரும் தவிக்கின்றனர்.