Balu Mahendra: ‘முதல் மனைவியும் வேணும் நீயும்’- ஷோபா உயிரை குடித்த வார்த்தை; புண்ணான பாலு; மூன்றாம் பிறை உருவான கதை!
Balu Mahendra: ஷோபா விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக நின்றார். தொடர்ந்து, நீங்கள் உங்களது முதல் மனைவியை தேடி போனீர்கள் என்றால், இங்கே நடப்பதே வேறு என்று சொல்லி, அவர் ஒரு கட்டத்தில் மிரட்ட ஆரம்பித்து விட்டார். - மூன்றாம் பிறை உருவான கதை!

Balu Mahendra: பாலுமகேந்திரா - ஷோபா காதல் கதை குறித்து பிரபல பத்திரிகையாளரான ராஜகம்பீரன் ஆகாயம் சினிமாஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
காதல் மோகம்
அவர் பேசும் போது, “எல்லாவற்றிலும் அதீத தன்மையோடு இருப்பவனால்தான் கலைஞன் ஆக முடியும். ஷோபாவை பாலு மகேந்திரா அறிமுகப்படுத்தினார். அவரை பாதுகாப்பதற்காக அவர் சில விஷயங்களை செய்தார். அந்த சமயத்தில் அவருக்கு திருமணம் ஆகி இருந்த பொழுதும், ஷோபாவின் மீது, அவரது மனம் வசப்பட்டு விட்டது.
இருப்பினும், அவர் முதல் மனைவியை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இரண்டாவது மனைவியாக ஷோபாவை ஏற்றுக் கொண்டு, அவருடனும் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஒரு இரவு ஷோபாவுக்கும், பாலுவுக்கும் இடையே பயங்கர தகராறு நடந்தது. அது என்னவென்றால் ஷோபா பாலுவை, நீங்கள் உங்களது முதல் மனைவியை விட்டுக் கொடுத்து விடுங்கள். நீங்கள் முழுக்க முழுக்க எனக்கு சொந்தமாக வேண்டும் என்றார்.