சகோதர்கள் என்று தெரியாமல் சண்டை - விவசாயம் முக்கியம் - அப்பவே தமிழ் சினிமா வேற மாறி!
64 years of Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் திரைப்படம் வெளியாக இன்றுடன் 64 ஆண்டுகள் ஆகிகின்றன.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கக் கூடியது தான் நமது நாடு. நமது நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான். ஆண்டாண்டு காலமாகத் தமிழ் சினிமா தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை விவசாயத்தின் தேவை குறித்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
அப்படி 1959 ஆம் ஆண்டு இயக்குநர் எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.
கதை
கணபதி இறந்த பிறகு ஒரு ஏழை பெண்மணி தனது இரண்டு மகன்களையும் வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார். அதனால் மூத்த மகனை ஆலை உரிமையாளர் ஒருவர் தத்தெடுத்துச் செல்கிறார்.