Ethirneechal Actress: 'நான் மதுபோதையில் கார் ஓட்டினேனா?' - டிவி நடிகை மதுமிதா சொன்ன விளக்கம்!
தான் மதுபோதையில் கார் ஓட்டவில்லை என எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா விளக்கமளித்துள்ளார்.

தான் மதுபோதையில் கார் ஓட்டவில்லை என சீரியல் நடிகை மதுமிதா விளக்கம் அளித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் நடித்து பிரபலமானவர், நடிகை மதுமிதா. இவர் எதிர்நீச்சல் சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். நடிகை மதுமிதா, தனது காரில் சென்னை சோழிங்கநல்லூரில் பயணித்துக்கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தின்மீது, அதில் பயணித்த நபருக்கு காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் தான், அந்த இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், ரவிக்குமார் என்றும்; அவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் என்பதும் தெரியவந்தது.
நடிகை மதுமிதாவின் இந்தச் செயலால் அதிருப்தியான பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், அதன்மூலம் காயத்தை ஏற்படுத்துதல் ஆகியப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.