Chinna Thambi: ‘மென்டல் பையனுக்கு ஜமீன் வீட்டு பொண்ணு கேக்குதோ?.. விதவைக்கு நடந்த கொடூரம்!- சின்னத்தம்பி உருவான கதை!
Chinna Thambi: அவனுக்கு கடைக்குச் சென்று பொருட்களை சொல்லி வாங்கும் அளவிற்கெல்லாம் அறிவு கிடையாது. ஆனாலும், அந்த வீட்டு உரிமையாளர் அவரைத்தான் அனுப்புவார். - சின்னத்தம்பி உருவான கதை!

Chinna Thambi: ‘மென்டல் பையனுக்கு ஜமீன் வீட்டு பொண்ணு கேக்குதோ?.. விதவைக்கு நடந்த கொடூரம்!- சின்னத்தம்பி உருவான கதை!
சின்னத்தம்பி திரைப்படம் உருவான கதையை பி.வாசு பிடி பிரைம் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
என்னை பாதித்த கேரக்டர்
அவர் பேசும் போது, “வாழ்க்கையில் நாம் நிறைய பேரை சந்திப்போம். ஆனால், சில கேரக்டர்கள் எங்களை போன்ற எழுத்தாளர்களை மிகவும் பாதித்து விடும். அந்த கேரக்டர் எங்கள் மனதிற்குள் ஊறிக்கொண்டே இருக்கும். நம்முடைய படைப்பில் அவரை எங்கேனும் பயன்படுத்த முடியுமா என்று நாங்கள் பார்த்துக் கொண்டே இருப்போம்.