ஆட்சியிலும் பங்கு! அதிகாரத்திலும் பங்கு! விஜய்க்கு வாழ்த்து கூறிய பா ரஞ்சித்!
தமிழக வெற்றிக் கழக்கத்தின் முதல் மாநாடு நேற்று நடந்து முடிந்த நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித் விஜயின் பேச்சுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி இருந்தார். கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தி இருந்தார். மேலும் அதன் மாநாட்டை பிரமாண்டமாக நேற்று (அக்டோபர் 27)விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டி சாலையில் நடத்தி முடித்துள்ளார். இந்த மாநாட்டில் பல அரசியல் கட்சிகளை எதிர்த்து வெளிப்படையாக பேசி எங்களது எதரி யார் எனவும் உறுதியாக பேசியுள்ளார். இந்த நிலையில் விஜய் மாநாடு தொடங்குவதற்கு முன் பல சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது மாநாடு முடிந்த பின் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு
தவெக கட்சியின் மாநாடு நேற்று நடந்ததை ஓட்டி அதில் பேசிய தவெக தலைவர் விஜய் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களுடைய கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு உண்டு என கூறியுள்ளார். இது நேரடியாக திமுகவை தாக்குவது போல் உள்ளது. ஏனெனில் சமீபத்தில் விசிகவினர் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்ட போது அதற்கு திமுகவினர் தரவில்லை என்றுஒரு விவாதம் உலாவிக் கொண்டிருந்தது. இந்நிலையில் தங்களோடு கூட்டணி வைக்கவே விஜய் இப்படி பேசி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இயக்குனர் பா.ரஞ்சித் அட்டகத்தி என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அதிகமாக ஆனார். அதனைத் தொடர்ந்து மெட்ராஸ் கபாலி, காலா என தொடர்ந்து தற்போது தங்கலான் வரை முழுக்க சமூகநீதி கொள்கையை மையமாக வைத்தே படங்களை இயக்கி வருகிறார். ஜாதிய பாகுபாடு இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை கூறிவரும் படங்களை எடுத்து வரும் ரஞ்சித் தற்போது விஜயின் மாநாட்டு பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கொள்கையை மேற்கோள்காட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.