போண்டா மூஞ்சு… சாச்சானா பஞ்சாயத்து.. முத்துவால் கதறிய ஆனந்தி.. சவுண்டுக்கு சங்கா? - விரட்டப்போகும் விஜய்சேதுபதி!
போண்டா மூஞ்சு… சாச்சான பஞ்சாயத்து.. முத்துவால் கதறிய ஆனந்தி.. சவுண்டுக்கு சங்கா? - விரட்டப்போகும் விஜய்சேதுபதி!பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்த நிலையில், விஜய்சேதுபதி அதனை விசாரிக்க சேரோடு வந்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி, பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இம்முறை கமல்ஹாசனுக்கு பதிலாக, நடிகர் விஜய்சேதுபதி களமிறங்கி இருக்க, அவருக்கே உரித்தான பாணியில் ஆரம்பித்த முதல் நாளிலேயே கவுண்டர்களை அடுக்கி, தன்னை நோக்கி வந்த பால்கள் அனைத்தையும் சிக்சர்களாக பறக்க விட்டுக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய நாளுக்கான 2 வது புரோமோ வெளியாகி இருக்கிறது.
அந்த புரோமோவில், சேரோடு பிக்பாஸ் செட்டிற்குள் வரும் விஜய் சேதுபதி, போட்டியாளர்களுக்கு, வீட்டில் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு, செட்டிற்குள் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு என எல்லோருக்கும் சேர் இருக்கிறது. ஆனால் எனக்கு சேர் இல்லை. போட்டியாளர்களும் அதிக நேரம் பேசுகிறார்கள். எனக்கு தோள்பட்டையெல்லாம் வலிக்கிறது என்றவர், நமக்கான சிம்மாசனத்தை யாரும் கொடுக்க மாட்டார்கள். நாம்தான் நமக்கான சிம்மாசனத்தை உருவாக்க வேண்டும் என்றார்.