Bhavana: நீதிமன்ற நடவடிக்கையால் அதிர்ச்சி! “என் தனியுரிமை பாதுகாப்பாக இல்லை” - வருத்ததுடன் நடிகை பாவனா பகிர்வு
நீதிமன்றத்தில் எனது தனியுரிமை தற்போது பாதுகாப்பாக இல்லை என்பதை அறிந்து மிகவும் பயமாக இருக்கிறது. நீதிமன்றத்தால் இதுபோன்ற தவறுகள் நடந்தால், அதை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் தான் பலத்தை இழக்கின்றனர் என்று பாவனா தெரிவித்துள்ளார்.

நடிகை பாவனா
கடந்த 2017இல் நிகழ்ந்த மலையாள சினிமா நடிகை பாவனாவுக்கு எதிரான நடந்த துன்புறுத்தல் ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சி அடையசெய்த சம்பவமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில், மலையாள நடிகர் திலீப் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதையடுத்து நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
பாவனா மனு தாக்கல்
இந்த வழக்கின் பிரதமான சாட்சியமாக மெமரி கார்டு இருந்து வந்தது. அதில்தான் நடிகை மீதான நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பான காட்சிகள் இடம்பிடித்திருந்தன.
இதையடுத்து நீதிமன்ற காவலில் இருந்த மெமரி கார்டை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியது குறித்து சிறப்பு விசாரணை நடத்தக் கோரி பாவனா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.