ஒரு பொம்பள நடக்குறதுல இருந்து .. பாரதி ராஜா சார் அப்படிதா.. சாப்பிட ரெஸ்டாரண்ட்க்கு போனா கூட' மனம் திறந்த நடிகை ருத்ரா!
ராதிகா மேடம் என்னைய பார்த்துட்டு இவங்களா.. எனக்கு சிஸ்டர் மாதிரில இருக்கு.. அப்படின்னாங்க. அப்ப சார் என்ன பார்த்து உனக்கு ஒரு வாரம் சூட்டிங் கிடையாது. அதுக்கு சார் ஒரு வாரம் டைம் தர்றேன் உனக்கு. எப்படியாவது உடம்ப குறைச்சுட்டு சூட்டுக்கு ரெடியாகு அப்படின்னார்.

நடிகை அஸ்வினி ருத்ரா கடந்த சில நாட்களுக்கு முன் Rednool யூடியூப் சேனலின் நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஆத்தங்கரை மரமே என்ற பாடல் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். 1993ல் வெளியான படம். நான் பாரதி ராஜா சாரிடம் வேலை செய்த இரண்டாவது படம். புது நெல்லு புது நாத்து முதல் படம். அடுத்து 4 ஆண்டு இடைவெயில் கிழக்குச் சீமையிலே படம் வந்தது.எனக்கு இன்னும் நியாபகம் இருக்கிறது. அப்போது நான் படிப்பை விடவே இல்லை. தனியாக படித்துக்கொண்டிருந்தேன். கிழக்கு சீமையிலே படம் போவதற்கு முன் ஒரு 6 மாதம் வீட்டில் வெட்டியா உட்கார்ந்து இருந்தேன். எக்ஸாம்க்கு படிச்சுட்டு இருந்தேன். அதுனால நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு வெயிட் போட்டு கொழு கொழுன்னு இருந்தேன். அப்போ இந்த படத்தோட வாய்ப்பு வந்தது. லொக்கேஷன் போனோம். அப்போ ஏற்கனவே ராதிகா மேம் எல்லாரும் சூட் பண்ணிட்டு இருந்தாங்க. நான் ஷெட்டுக்கு போன அப்பறம் தான் ராதிகா மேம் கிட்ட முதல் முறையா அறிமுகப்படுத்துறாங்க. இவங்கதா உங்க பொண்ணா நடிக்கப்போறாங்கன்னு சொன்னாங்க. அப்ப ராதிகா மேம் என்ன பார்த்தாங்க.. நிஜமாவே அப்ப ரொம்ப கொழு கொழுன்னு நல்லா புசுக்கு புசுக்குன்னு இருந்தேன் அப்போ.
ராதிகா மேடம் என்னைய பார்த்துட்டு இவங்களா. இவங்கள பார்த்தா எனக்கு சிஸ்டர் மாதிரில இருக்கு.. அப்படின்னாங்க. அப்ப சார் என்ன பார்த்து ஒரே ஒரு வார்த்தை சொன்னாங்க உனக்கு ஒரு வாரம் சூட்டிங் கிடையாது. நா ஏன் சார் அப்படின்னேன்.
அதுக்கு சார் ஒரு வாரம் டைம் தர்றேன் உனக்கு. எப்படியாவது உடம்ப குறைச்சுட்டு சூட்டுக்கு ரெடியாகு அப்படின்னார்.