Ashwini Nambiar: ‘அவ்வளவும் வெள்ளை நிற உடைதான்.. தண்ணில நனைஞ்சு ஆஸ்துமாவே வந்துடுச்சு' - அஸ்வினி பேட்டி!
Ashwini Nambiar: அந்தப்பாடலின் கடைசி ஷாட்டில், நானும் விக்னேஷும் நடந்து வந்து கொண்டிருப்போம். அப்போது நான் பாரதிராஜா சார் சொன்னது போல நடந்து வருகிறேன் என்று நினைத்து நடந்து வந்தேன். - அஸ்வினி பேட்டி!

பாரதிராஜா இயக்கிய கிழக்குச் சீமையிலேயே படத்தில் இடம் பெற்ற ‘ஆத்தங்கரை மரமே’ பாடலில் பணியாற்றிய அனுபவம் பற்றி நடிகை அஸ்வினி பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
பாரதிராஜா சார் சொல்லிக்கொடுத்ததுதான்.
இது குறித்து அவர் பேசும் போது, “உண்மையில் அந்தப்பாடலில், நான் எப்படி நடிக்க வேண்டும். நான் எப்படி வெட்கப்பட வேண்டும், எப்படி மேலே பார்க்க வேண்டும், எப்படி கீழே பார்க்க வேண்டும், எல்லாமே பாரதிராஜா சார் சொல்லிக்கொடுத்ததுதான்.
அந்தப்பாடலின் கடைசி ஷாட்டில், நானும் விக்னேஷும் நடந்து வந்து கொண்டிருப்போம். அப்போது நான் பாரதிராஜா சார் சொன்னது போல நடந்து வருகிறேன் என்று நினைத்து நடந்து வந்தேன். ஆனால், அவர் என்னிடம் அதை எதிர்பார்க்கவில்லை. உடனே என்னிடம் என்ன பாடலுக்கு ஏற்றது போல நடந்து வருகிறாய் என்று கேட்டார். நான் உடனே பாடலுக்கு ஏற்றபடிதானே சார் நடந்து வர வேண்டும் என்று சொல்ல, இல்லை அந்த பாடலுடைய ரிதமும் நீ நடந்து வருவதும் ஒன்று போல் இருக்கக் கூடாது என்றார்.