Thalapathy Vijay: ப்ரீமியர் காட்சியில் கால் நடுங்கிய ரத்னம்;விஜய் கொடுத்த கன்னக்குழி ரியாக்‌ஷன்; ஹிட்டான குஷி உருவான கதை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy Vijay: ப்ரீமியர் காட்சியில் கால் நடுங்கிய ரத்னம்;விஜய் கொடுத்த கன்னக்குழி ரியாக்‌ஷன்; ஹிட்டான குஷி உருவான கதை

Thalapathy Vijay: ப்ரீமியர் காட்சியில் கால் நடுங்கிய ரத்னம்;விஜய் கொடுத்த கன்னக்குழி ரியாக்‌ஷன்; ஹிட்டான குஷி உருவான கதை

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 27, 2024 05:30 AM IST

Thalapathy Vijay: விஜயை பொறுத்தவரை, அவருக்கு கதை பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்பதை கணிக்கவே முடியாது. இதனையடுத்து நான் விஜயிடம், விஜய் உங்களுக்கு கதை பிடித்து இருக்கிறதா என்று கேட்டேன். அவர் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டார். - குஷி உருவான கதை

Thalapathy Vijay: ப்ரீமியர் காட்சியில் கால் நடுங்கிய ரத்னம்;விஜய் கொடுத்த கன்னக்குழி ரியாக்‌ஷன்; ஹிட்டான குஷி உருவான கதை
Thalapathy Vijay: ப்ரீமியர் காட்சியில் கால் நடுங்கிய ரத்னம்;விஜய் கொடுத்த கன்னக்குழி ரியாக்‌ஷன்; ஹிட்டான குஷி உருவான கதை

விஜய்க்கு கதை பிடித்து விட்டது 

இது குறித்து அவர் பேசும் போது, “விஜய் அப்போது மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக மாறிவிட்டார். குஷி படமானது இடுப்பை நீ பார்த்தாயா, இல்லையா என்பதில் வரும், ஈகோவை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கதை. அந்த கதையை எஸ் ஜே சூர்யா விஜயிடம் சொன்னார். 

விஜயை பொறுத்தவரை, அவருக்கு கதை பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்பதை கணிக்கவே முடியாது. இதனையடுத்து நான் விஜயிடம், விஜய் உங்களுக்கு கதை பிடித்து இருக்கிறதா என்று கேட்டேன். அவர் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டார். இதனையடுத்து நாங்கள் படப்பிடிப்பிற்கு சென்று விட்டோம். 

கண்டுகொள்ளாத எஸ்.ஜே.சூர்யா 

நானும், விஜயும் எஸ். ஜே சூர்யாவிடம் படத்தில் இரண்டு ஆக்சன் சார்ந்த சண்டைக் காட்சிகளை வைக்குமாறு வலியுறுத்தினோம். ஆனால்,எஸ்.ஜே சூர்யாவுக்கு அப்படியான ஐடியாவே இல்லை. ஆனாலும்,அவர் ஓகே ஓகே என்று சொல்லி, படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தார். இந்த நிலையில், ஒரு நாள் படப்பிடிப்பில், எஸ்.ஜே சூர்யாவிடம், படத்தில் சண்டை காட்சிகளை வைத்தால், படம் பி , சி சென்டர்களில் ரீச்சாகும் என்று மீண்டும் சொன்னேன். அதை பின்னால் இருந்து விஜய் கேட்டுக் கொண்டிருந்தார். 

அவருக்கு படம் நன்றாக வந்து கொண்டு இருந்த காரணத்தால், படத்தில் சண்டைக்காட்சிகள் இல்லை என்றாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார். அந்த படத்தின் முதல் பிரீமியர் காட்சி, சென்னை உதயம் தியேட்டரில் தான் நடந்தது படத்தின் இரண்டு ரீல்கள் முடிந்த பின்னர், அங்கிருந்த ஸ்பீக்கர்கள் அவுட் ஆகிவிட்டன. இதனையடுத்து பக்கத்தில் இருந்த திரையரங்கில் இருந்து ஸ்பீக்கர்களை எடுத்து வந்து மாட்டினார்கள். 

படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக இருந்தது. நான் முன்னதாக நான் இந்தியன் படத்தை எடுத்திருந்தேன். விஜய் ஒரு மாஸ் ஹீரோ. இது இரண்டையும் வைத்து, ரசிகர்கள் வேறு எதையாவது எதிர்பார்த்து விடுவார்களோ, இது காதல் கதை என்பதால் அவர்களுக்கு பிடிக்காமல் போய் விடுமோ என்று நினைத்தேன். அதனால் அந்த காட்சியின் போதே பயத்தில் என்னுடைய  கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன.” 

கிளைமாக்ஸ்- ல் கொஞ்சம் நீளம் இருந்தது. இதையடுத்து அதை எடிட்டிங்கில் சரி செய்து, அடுத்த நாள் ரிலீஸ் செய்தோம். ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக,ரசிகர்கள் ரியாக்ட் செய்தார்கள் காரணம் என்னவென்றால் முதல் ரீலிலேயே அவர்கள் படத்துடன் கனெக்ட் ஆகிவிட்டார்கள். இதையடுத்து, சூர்யாவை அழைத்து படம் ஹிட்டு என்று சொல்லி விட்டேன்” என்று பேசினார். 

 

Ghilli Movie: கில்லித்திரைப்படம் உருவான விதம் குறித்து அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேசினார். 

 

ஏ எம் ரத்தினம்தான் சரியாக இருப்பார்

அவர் பேசும் போது, “கில்லி திரைப்படம் தெலுங்கில் வெளியான ஒக்கடு திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அந்தத் திரைப்படத்தை விஜயும், அவரது அப்பாவான எஸ்ஏசியும் பார்த்தார்கள். அப்போது அந்த படம் விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. இதையடுத்து விஜய் அவரது அப்பாவிடம், ஒக்கடு உரிமையை நாம் வாங்கிவிடலாம் என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில்தான் எஸ்.ஏ.சி இந்த படத்தில் விஜயை சரியாக பொருத்தி, பிரமாண்டமாக எடுப்பதற்கு ஏ எம் ரத்தினம்தான் சரியாக இருப்பார் என்று கருதி, என்னை அழைத்தார்.

படத்தை பார்த்த பொழுது, படம் மிகவும் அதிக பொருட்செலவுடன் எடுக்கப்பட வேண்டிய படம் என்பதை நான் கணித்து விட்டேன் இதையடுத்து நான் எஸ்.ஏ.சி சாரிடம், விஜய் இந்த படத்தில் நடிக்கும் பொழுது, படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஆனால், இந்த படத்தின் வெற்றி, அவரது அடுத்த படத்திற்கு பேருதவியாக இருக்கும் என்பது தெரியும். ஆகையால், நீங்கள் எனக்கு இந்த படம் செய்தால், இரண்டு படங்களுக்கான கால்சீட்டை தாருங்கள்.. என்று கூறி, முடிவை நாளை சொல்கிறேன் என்று சொல்லி வந்தேன்.

மிகப்பெரிய செட்

நான் ஏற்கனவே தரணியை வைத்து தூள் என்ற படத்தை அப்போது எடுத்திருந்தேன். ஆகையால், அடுத்த திரைப்படத்திலும் அவருடன் இணைய வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதனால்தான் தரணியை அழைத்து, அந்த படத்தை இயக்க வைத்தேன். கில்லி படத்தை பொருத்தவரை, தெலுங்கில் அந்த திரைப்படம் கிளாஸாக இருக்கும். தமிழில் மாஸாக இருக்கும்.கில்லி திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே மாஸாக இருக்கும். படத்தில் இடம்பெற்ற நடிகர் விஜயின் வீடும், அதை சுற்றி இருந்த இடங்களையும், நாங்கள் மிகப்பெரிய செட்டாக வடிவமைத்தோம். மொத்தம் 65,000 sqft -ல் மொட்டை மாடி போன்று அதனை நாங்கள் வடிவமைத்தோம்.

அது கடலோரம் இருக்க வேண்டும், பின்னால் லைட் ஹவுஸ் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டதால், நாங்கள் அதனை மகாபலிபுரத்தில் வைத்து எடுத்தோம். அப்போது அந்த செட்டும் ரெடியாகவில்லை. இந்த நிலையில்தான் வீட்டுக்குள் எடுக்க வேண்டிய காட்சிகளை நாங்கள் எடுத்தோம். அப்போதுதான் விஜயின் அம்மாவாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற கேள்வி எழுந்தது.

தெலுங்கில் மகேஷ்பாபுவின் அம்மாவாக நடித்த கீதா, அப்போது அமெரிக்காவில் இருந்தார். அதனால், அவரால் முடியாது என்று சொல்லிவிட்டார். அதனை தொடர்ந்து நடிகை சீதாவை நடிக்கை வைக்க முயற்சி செய்தோம். தேதி பிரச்சினையால் அவராலும் நடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் ஜானகி செபாஸ்டியனை நாங்கள் கமிட் செய்தோம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, அந்த படத்தில் இடம் பெற்ற அம்மா கதாபாத்திரம், ஒன்று ஸ்டார் நாயகியாக இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் இயல்பாகவே ஒரு தாய் போல இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதற்காகத்தான் அவரை கமிட் செய்தோம்.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: