Aishwarya Bhaskaran: ‘எல்லாம் அந்த கிழவியால;ரோஜா படத்த பார்த்துட்டு செருப்பாலேயே; மணிரத்னம் படத்துல கடைசி வர’ - ஐஸ்வர்யா
Aishwarya bhaskaran: ருக்குமணி ருக்குமணி பாடலை தான் முதல்முறையாக கேட்டேன். என்னுடைய பாட்டியின் பெயரும் ருக்மணி தான். அந்த பாடலை கேட்ட உடனேயே அய்யோ… நல்ல படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று நினைத்து வயிறு கலங்கிவிட்டது - ஐஸ்வர்யா!

மணிரத்னம் படங்களில் தான் ஏன் நடிக்க முடியாமல் போனது என்பது தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா பேசி இருக்கிறார்.
இது குறித்து பெட்டர் டுடே யூடியூப் சேனலுக்கு பேசிய அவர், “என்னுடைய பாட்டி ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக என்னை கமிட் செய்து இருந்தார். நாளை ஷூட்டிங்… அதனால் இன்று கிளம்ப வேண்டும் என்பது மாதிரியான சூழ்நிலை. இந்த நிலையில்தான் எனக்கு ரோஜா படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது.
ஆனால் இந்தப்படத்தில் கமிட் ஆனதால், மணிரத்தினத்தின் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. அதற்கு முன்னதாக தளபதி திரைப்படத்தில் நடிகை சோபனா நடித்த கதாபாத்திரத்தில் என்னை நடிக்க கேட்டிருந்தார்கள். அப்போதும் இதே போல தான் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் கமிட் ஆகி இருந்தேன்.அதனால் அந்தப் படத்திலும் நடிக்க முடியாமல் சென்று விட்டது.