Varalaxmi Sarathkumar: போதைப்பொருள் வழக்கு..NIA தரப்பில் இருந்து சம்மனா?- நொந்து அறிக்கை வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்
என்.ஐ.ஏ தரப்பில் இருந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு வரலட்சுமி சரத்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில்இது குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

வரலட்சுமி சரத்குமார்
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் "அண்மையில் நடந்த சில நிகழ்வுகளுக்கு நான் முன் வந்து விளக்கம் கொடுப்பது முக்கியம் என்று நினைக்கிறேன். ஆதி லிங்கம் தொடர்பான வழக்கில் என். ஐ.ஏ தரப்பில் இருந்து எனக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது என்று உலாவிக்கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் வதந்தியே. எனக்கு அப்படியான எந்த சம்மனும் அனுப்பப்படவில்லை.
தனிப்பட்ட முறையில் சந்திப்பதிற்கும் எனக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை. ஆதிலிங்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் குறுகிய கால இடைவெளியில் என்னிடம் பகுதி நேர மேலாளராக பணியாற்றினார்.