'நான் ரோட்டுல நடந்து வந்தா 4 பேர் பாக்கணும்.. கல்யாணம் பண்ணுணா இதெல்லாம் முடியாது'.. கோவை சரளா ஓபன் டாக்
இப்போது எல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு மக்கள் படுற பாட்ட எல்லாம் பாத்தா எனக்கு சிரிப்பா வருது என நடிகை கோவை சரளா கூறியுள்ளார்.

'நான் ரோட்டுல நடந்து வந்தா 4 பேர் பாக்கணும்.. கல்யாணம் பண்ணுணா இதெல்லாம் முடியாது'.. கோவை சரளா ஓபன் டாக்
தமிழ் சினிமாவிற்கு எப்படி ஆச்சி மனோரமா தவிர்க்க முடியாத நடிகையாக மாறினாரோ, அதே போல் தமிழ் சினிமாவிற்குள் அவரைப் போலவே மக்கள் மனதில் சிறகடித்து பறந்தவர் கோவை சரளா.
மக்கள் மத்தியில் பிரபலம்
கோவை சரளா சினிமாவில் அறிமுகமான புதிதில் இவர் வயது முதிர்ந்த பெண்ணாகவும் குடும்பபாங்கான கதாப்பாத்திரத்திலும் நடித்து வந்தார். பின் மெல்ல மெல்ல இவரின் நடிப்பு மக்கள் மத்தியில் பிரபலமாகி, இவருக்கென வசனங்கள், தனி காட்சிகள் வைத்து பின், கவுண்டமனி, செந்தில், வடிவேலு போன்ற காமெடி நடிகர்கள் மட்டுமல்லாமல், கமல் போன்ற பெரும் கதாநாயகனுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்,
திருமணம் மீது செல்லாத ஆர்வம்
காலம் செல்ல செல்ல இவர் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்ததால் காதல், திருமணம் போன்றவற்றில் ஆர்வம் செலுத்தாமல் நடிப்பில் தன் நாட்டத்தை அதிகரித்து வந்தார்.