ரஜினி உடன் நடந்த கல்யாணம்..? தீயை பற்ற வைத்த பத்திரிகை..குறுக்கே புகுந்து ரைடு விட்ட மோகன்பாபு - சம்பவம் தெரியுமா?
ரஜினி உடன் இணைத்து பேசப்பட்ட தகவலால் மோகன்பாபு கோபப்பட்ட கதையை நடிகை கவிதா பகிர்ந்து இருக்கிறார்.

ரஜினி உடன் நடந்த கல்யாணம்..? தீயை பற்ற வைத்த பத்திரிகை..குறுக்கே புகுந்து ரைடு விட்ட மோகன்பாபு - சம்பவம் தெரியுமா?
ரஜினிகாந்துக்கும் தனக்கும் திருமணம் நடந்ததாக வெளியான தகவல் குறித்து குமுதம் சேனலுக்கு நடிகை கவிதா சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
பொய்யான செய்தி
இது குறித்து அவர் பேசும் போது, “நான் மோகன்பாபு சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தேன். அப்போது என்னுடைய மேக்கப் மேன் ஒரு பத்திரிக்கையை எடுத்து என்னிடம் வந்தார்; அவர் அந்த பத்திரிகையை எங்களிடம் காண்பித்தார். அதில், நானும் ரஜினியும் கல்யாணம் செய்து கொண்டு விட்டோம் என்று செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்தியை குறிப்பிட்ட மேக்கப் மேன் நீ ஏன் இங்கு உட்கார்ந்து இருக்கிறாய். உனக்குதான் ரஜினிகாந்துடன் கல்யாணம் ஆகிவிட்டதே, நீ அங்கு தானே இருக்க வேண்டும் என்று சொன்னார்.