“முதல் ½ வொர்க் அவுட் ஆகல; வெற்றி கேமரா வேற லெவல்; அந்த ஆக்ஷன் காட்சி இருக்கே” - கங்குவா விமர்சனத்திற்கு ஜோதிகா பதில்
கங்குவாவிடம் சிறுவன் செலுத்தும் அன்பு மற்றும் இழைக்கும் துரோகம் உள்ளிட்டவற்றை விமர்சனத்தில் சொல்ல மறந்து விட்டார்கள். - கொடுத்திருக்கிறார்.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம், மிகப்பெரிய பீரியட் ஆக்சன் படமாக உருவாகி ரிலீஸாகியிருக்கிறது. பாலிவுட் முன்னணி நடிகை திஷா பதானி படத்தின் நாயகியாக நடித்திருந்தார். அனிமல் படத்தின் வில்லன் நடிகர் பாபி தியோல், ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் பேனர்களில் கே.இ.ஞானவேல் ராஜா, வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் கூட்டாக கங்குவா திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 14-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 35 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் ஜோதிகா பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “இந்தப்பதிவை நான் சூர்யாவின் மனைவியாக எழுத வில்லை. மாறாக ஜோதிகாவாகவும், சினிமா காதலிப்பவளாகவும் எழுதுகிறேன். கங்குவா திரைப்படம் ஒரு சிறந்த சினிமா. சூர்யாவை நினைத்து பெருமை படுகிறேன். சினிமாவை முன்னோக்கி கொண்டு செல்லும் நடிகராக நீங்கள் இருக்கிறீர்கள். உண்மையாகச் சொல்கிறேன். படத்தின் முதல் அரைமணிநேரம் வொர்க் அவுட் ஆகவில்லைதான். சவுண்டும் அதிகமாக இருந்தது.