Actor Vijay Donated Rs.1 Crore: தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப் பணி - ரூ.1 கோடி நன்கொடை அளித்த நடிகர் விஜய்!
Actor Vijay Donated Rs.1 Crore: தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியை நடிகர் விஜய் வழங்கியுள்ளார்.

Actor Vijay Donated Rs.1 Crore: நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக, தென்னிந்திய சங்கத்துக்கு ரூபாய் ஒரு கோடிக்கான நிதியை, நடிகர் விஜய் வழங்கியுள்ளார். இதனை தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு உறுதிசெய்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கம் 1952ஆம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கி வருகிறது. இதன் தற்போதைய தலைவராக நாசர் செயல்பட்டுவருகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தி சிவகுமாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர். மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர்களாக பூச்சி முருகனும், கருணாஸும் பதவி வகித்து வருகின்றனர்.
இந்தச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக குஷ்பூ, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்னம், பசுபதி, சிபிராஜ், லதா சேதுபதி, விக்னேஷ், சோனியா, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம் குமார், ஸ்ரீமன், ரத்தின சபாபதி, ரத்தினப்பா, எம்.ஏ. பிரகாஷ், வி.கே.வாசுதேவன், ஆர். ஹேமச்சந்திரன், எஸ்.எம்.காளிமுத்து ஆகிய சினிமா மற்றும் நாடகக் கலைஞர்கள் உள்ளனர்.