தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சத்தமே இல்லாமல் உதவி செய்து வரும் பிளாக் பாண்டி

சத்தமே இல்லாமல் உதவி செய்து வரும் பிளாக் பாண்டி

Aarthi V HT Tamil
May 12, 2022 08:13 PM IST

பிளாக் பாண்டி சத்தமே இல்லாமல் கடந்த 20 வருடங்களாக சிரமப்பட்டு வரும் நபர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

பிளாக் பாண்டி
பிளாக் பாண்டி

ட்ரெண்டிங் செய்திகள்

அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் பிளாக் பாண்டி. இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் சத்தமில்லாமல் உதவி செய்து வருகிறார்.

இவரது அமைப்புக்கும், செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இயக்குநர் சமுத்திரக்கனி கைகொடுத்து வருகிறார்.

இந்த எண்ணம் எப்படி தோன்றியது? என பிளாக் பாண்டிக்குள் முதல் முறையாக பேசியுள்ளார்.  அவர் கூறுகையில், "கடந்த 12 வருடங்களுக்கு முன்பே இதுபோன்று ஒரு அமைப்பை உருவாக்கிக் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றிவிட்டது. 

நான் நன்றாக வளர்ந்து ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு பிறகு மற்றவர்களுக்கு உதவி செய்யலாம் என்று அதை தள்ளிப்போட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு இயன்றதை செய்வோம் இணைந்து செய்வோம் என்கிற புதிய முயற்சியுடன் நல்ல மனிதர்களின் ஒத்துழைப்புடன் கடந்த இரண்டு வருடமாக இந்த உதவும் மனிதம் அமைப்பு மூலம் பலருக்கும் உதவிக்கரம் நீட்டி வருகிறோம்.

வாரந்தோறும் 250 நபர்களுக்கு அன்னதானம் செய்து வருகிறோம். இதற்கு இயக்குநர் சமுத்திரக்கனி பக்கபலமாக இருந்து ஆதரவு அளித்து வருகிறார். சமுத்திரக்கனியுடன் கடந்த 20 வருடங்களாக எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. நான் இது போன்ற ஒரு விஷயத்தை ஆரம்பித்துள்ளேன் என்பதை கேள்விப்பட்டு, என் நோக்கத்தை புரிந்துகொண்டு அவராகவே இதில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இப்போது இப்படி ஒரு அமைப்பை நடத்தி உதவி செய்து வருகிறோம் என்பதை வெளியில் சொல்வதற்கு கூட இதுபோன்று இன்னும் பலர் மனித நேயத்துடன் உதவி செய்ய கிளம்பி வருவார்கள் என்கிற காரணம் மட்டுமின்றி வேறு நோக்கம் எதுவும் இல்லை.

இந்த அமைப்பின் மூலம் பலருக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி ரத்த தானம் ஆகியவற்றை செய்து வருகிறோம். இன்னும் குறிப்பாக ஈமக்கிரியை கூட செய்ய வசதி இல்லாதவர்களுக்கு அதற்கான பணியை நாங்களே முன்னின்று செய்து கொடுக்கிறோம்.

என்னுடைய தாத்தா, டி.ஆர்.மகாலிங்கம் காலத்தில் அவருடன் நாடகங்களில் இணைந்து நடித்தவர். அப்போது தங்களது சக நடிகர்கள் மரணித்தால் அவர்களது இறுதிச் சடங்குகளை முன்னின்று தங்களது சொந்த செலவில் செய்து கொடுத்தவர். எனது தாத்தா, அதன்பிறகு எனது தந்தை என அப்படியே எனக்குள்ளும் அந்த விதை போடப்பட்டுவிட்டது.

இப்படி நாம் செய்யும் உதவிகளுக்கு விளம்பரம் தேவையில்லை என்றுதான் நினைத்தேன்.

என்னுடைய சொந்த செலவில் செய்யும் உதவிகளுக்கு என் முகத்தை கூட நான் காட்ட விரும்புவதில்லை. ஆனால் பல நல்ல உதவும் உள்ளங்கள் மூலம் கிடைக்கும் பணத்தை மற்றவருக்காக செலவிடும்போது அது நிச்சயம் வெளியே தெரிய வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற உதவும் எண்ணத்துடன் இன்னும் பலர் முன் வருவார்கள் “ என்றார். 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்