Karunas: கருணாஸ் பையில் 40 துப்பாக்கி குண்டுகள்.. விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு!
Karunas: விமான நிலைய பாதுகாப்பை கருணாஸ் மீறியதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

கருணாஸ் பையில் 40 துப்பாக்கி குண்டுகள்.. விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு
Karunas: சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கருணாஸ் கை பையை சோதனை செய்த போது அதில் 40 துப்பாக்கி குண்டுகள் இருந்தது தெரிய வந்தது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் நடிகர் கருணாஸ்.
இந்நிலையில் கருணாஸ் சொந்த விஷயத்திற்காக சென்னையில் இருந்து திருச்சி செல்ல இருந்தார். இதற்காக அவர் சென்னை விமான நிலையத்துக்கு இன்று ( ஜூன் 2 ) சென்று இருந்தார்.