Puthu Nellu Puthu Nathu : கொடூர வில்லனாக நெப்போலியன்.. சுட்டி பெண்ணாக சுகன்யா..33ஆம் ஆண்டில் புது நெல்லு புது நாத்து!
Puthu Nellu Puthu Nathu : தாமிரபரணியின் ஆற்றங்கரையில் அமைந்துள்ள சிறு கிராமத்தை மையப்படுத்தி இந்த கதை தொடங்குகிறது. பாரதிராஜா திரைப்படத்தின் கதையானது எளிமையாக இருந்தாலும், கதை சொல்லும் போக்கு அதில் ரசிகர்களை அமர வைக்கும் திறன் என்பது பாரதிராஜாவால் மட்டுமே சாத்தியமாகும்.

1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் புது நெல்லு புது நாத்து. இத்திரைப்படம் நெப்போலியன் மற்றும் நடிகை சுகன்யாவுக்கு அறிமுகம்.
தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இயக்குநர்களில் தற்போது வரை உச்சத்தில் இருக்கும் இயக்குநர் பாரதிராஜா. இவர் தனது திரைப்படத்தில் பல பேரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதில் பலரும் தமிழ் திரைத்துறையை ஒரு வட்டமே அடித்திருக்கின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது.
நடிகை சுகன்யா, நடிகர் நெப்போலியன் உள்ளிட்ட ஒன்பது பேரை ஒரே படத்தில் பாரதிராஜா அறிமுகப்படுத்திய திரைப்படம் தான் புது நெல்லு புது நாத்து. இந்த படத்தில் பாரதிராஜா புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருப்பார். இசை இசைஞானி இளையராஜா தான். இந்த திரைப்படத்தின் கதையானது தாரஸ் புல்பா என்ற ரஷ்யக் கதையிலிருந்து நமக்கு ஏற்றவாறு மாற்றப்பட்ட கதையாகும்.