தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Lok Sabha Election 2024: ’காஷ்மீரில் என்ன நடக்கிறது! அனந்த்நாக்-ரஜோரி தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்!’

Lok Sabha Election 2024: ’காஷ்மீரில் என்ன நடக்கிறது! அனந்த்நாக்-ரஜோரி தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்!’

Kathiravan V HT Tamil
Apr 30, 2024 09:52 PM IST

“தேர்தல் தேதியை மே 7 முதல் மே 25 வரை திருத்த ஆணையம் முடிவு செய்துள்ளது என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது”

அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது,
அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது,

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி, பிரபல மதத் தலைவர் மியான் அல்தாஃப் உட்பட 20 வேட்பாளர்கள் போட்டியிடும் அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில் வரும் மே மாதம் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருந்தது. 

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு பல்வேறு தளவாடங்கள், தகவல் தொடர்பு மற்றும் இணைப்பின் இயற்கையான தடைகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்காட்டி உள்ளனர். 

மோசமான வானிலயால் ஏற்பட்ட பாதிப்பு இது பிரச்சாரத்திற்கு ஒரு தடையாக மாறி உள்ளது. இது பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நியாயமான வாய்ப்புகள் இல்லாததற்கு வழிவகுத்தது உள்ளது. 

"யூனியன் பிரதேச நிர்வாகத்தின் வானிலை தொடர்பான அறிக்கையை பரிசீலித்த பின்னர், அந்த தொகுதியில் நிலவும் கள நிலைமையை பகுப்பாய்வு செய்த பின்னர், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 56 இன் கீழ், தேர்தல் தேதியை மே 7 முதல் மே 25 வரை திருத்த ஆணையம் முடிவு செய்துள்ளது என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மே 7ஆம் தேதி நடைபெற உள்ள மூன்றம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலின் போது அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதிக்கும் தேர்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆறாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மே 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. தேர்தல் தேதியைத் தவிர, அட்டவணையின் எந்தப் பகுதியிலும் எந்த மாற்றமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி (பிடிபி) ஆகியோர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என்று  கடந்த வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்து இருந்தனர். 
 

இது குறித்து பேசிய உமர் அப்துல்லா, "இத்தகைய நடவடிக்கையை தேர்தல் ஆணையக்ம் எடுக்கக்கூடாது. ஒத்திவைப்பு கோரிக்கை அனைத்து தரப்பினரிடம் இருந்து வரவில்லை, இதில் விநோதமான விஷயம் என்னவென்றால், தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுத்தவர்களில் சிலர் போட்டியிடாமல் இருப்பதுதான். தமிழகத்தில் உள்ள தொகுதிகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு நான் கடிதம் எழுதினால் அதனை தேர்தல் ஆணையம் கவனிக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறி இருந்தது. 
 

தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் மியான் அல்தாப்பை எதிர்த்து அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் போட்டியிடும் மெகபூபா முப்தி கூறுகையில், "என்னை நாடாளுமன்றத்தில் பார்க்க விரும்பாததால், மக்கள் அனைவரும் மதம் மற்றும் கட்சி பேதங்களைக் கடந்து, எனக்கு எதிராகக் குழுமி உள்ளனர். எனக்கு மக்கள் உள்ளதால் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க மற்றும் மோசடி செய்கிறார்கள் என குற்றம்சாட்டி உள்ளார். 

WhatsApp channel