World Cup Cricket 2023: இலங்கையை ஊதித்தள்ளி வென்ற தென்னாப்பிரிக்கா அணி; எய்டன் மார்க்ரம்முக்கு ஆட்டநாயகன் விருது!
World Cup Cricket 2023: இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய போட்டியில், இலங்கையை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, தென்னாப்பிரிக்க அணி

World Cup Cricket 2023: டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில், உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிக்கு எதிரான 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்களை குவித்தது.
இதனையடுத்து 429 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை விளையாடத் தொடங்கியது. இந்த ஸ்கோரின் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ஸ்கோரை பதிவு செய்த அணியானது தென் ஆப்பிரிக்கா. இதற்கு முன் ஆஸ்திரேலியா 2015 உலகக் கோப்பையில் 7 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் எடுத்தது.
அடுத்த இடத்தில் இந்தியா இருந்தது. 2007இல் 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் எடுத்தது. தற்போது பிற அணிகளை பின்னுக்குத் தள்ளி, தென் ஆப்பிரிக்கா முதலிடத்துக்கு வந்துள்ளது.