தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Virat Kohli Fined: நடத்தை விதி மீறலுக்காக விராட் கோலிக்கு பிசிசிஐ மேட்ச் கட்டணத்தில் இருந்து 50% அபராதம் விதிப்பு

Virat Kohli Fined: நடத்தை விதி மீறலுக்காக விராட் கோலிக்கு பிசிசிஐ மேட்ச் கட்டணத்தில் இருந்து 50% அபராதம் விதிப்பு

Manigandan K T HT Tamil
Apr 23, 2024 01:07 PM IST

Virat Kohli: நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக ஆர்சிபி அணியின் விராட் கோலிக்கு ஐபிஎல் 2024 போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி
விராட் கோலி (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

கோலி ரிவியூ தேர்வு செய்தாலும், மூன்றாவது நடுவரின் இறுதி தீர்ப்பு ஆர்சிபிக்கு எதிராக சென்றது, ஏனெனில் தற்போதைய ஆரஞ்சு தொப்பி வைத்திருக்கும் கோலி, 7 பந்துகளில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.கே.ஆருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழந்ததால் போட்டி நடுவர்களிடம் கோபமடைந்த கோலி, ஆர்சிபியின் தோல்வியுற்ற ரன் சேஸில் முதல் விக்கெட்டை வீழ்த்தியதால் மிகுந்த மனச் சோர்வுடன் காணப்பட்டார். இது ஒரு பெரிய விவாதத்தை தூண்டியது. இந்நிலையில், பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது நடத்தை விதிமுறை மீறலுக்காக கோலிக்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டது.

கோலிக்கு பிசிசிஐ கடுமையான அபராதம்

"ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பேட்ஸ்மேன் விராட் கோலி, ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான டாடா இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 இன் 36 வது போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக தனது போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார் " என்று ஐபிஎல் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐபிஎல் அறிக்கையின்படி, ஐபிஎல் நடத்தை விதிகள் பிரிவு 2.8 இன் கீழ் கோலி நிலை 1 நடந்தை விதியை மீறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆர்சிபி கேப்டன் குற்றத்தை ஒப்புக்கொண்டு போட்டி நடுவரின் ஒப்புதலை ஏற்றுக்கொண்டார். "நடத்தை விதிகளின் நிலை 1 மீறல்களுக்கு, போட்டி நடுவரின் முடிவு இறுதியானது மற்றும் கட்டுப்படுத்தும்" என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

கோலியின் ஆட்டமிழப்புக்கு அம்பயர் ஏன் நோ-பால் கொடுக்கவில்லை

கோலியின் நிலைப்பாடு தொடர்பான பந்து பாதையை பகுப்பாய்வு செய்ய ஹாக்-ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பார்த்த போது கோலி, கிரீஸுக்குள் இருந்திருந்தால் ஹர்ஷித்தின் மெதுவான ஃபுல் டாஸ் பேட்ஸ்மேனின் இடுப்புக்குக் கீழே சென்றிருக்கும் என்று டிவி நடுவர் கண்டறிந்தார். இதனால், மூன்றாவது நடுவரால் கோலி அவுட் என அறிவிக்கப்பட்டார்.

"அந்த கட்டத்தில் விராட் கோலியும் நானும் பந்து அவரது இடுப்பை விட உயரமாக இருக்கலாம் என்று நினைத்தோம்" என்று ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் போட்டிக்குப் பிறகு கூறினார். முன்னதாக, கே.கே.ஆருக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் டு பிளெசிஸ் தனது அணி மெதுவாக ஓவர் ரேட்டை பராமரித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டதாக ஐபிஎல் ஊடக ஆலோசனை உறுதிப்படுத்தியது.

IPL_Entry_Point