Women's Asia Cup: மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடரில் இருந்து ஸ்ரேயங்கா பாட்டீல் விலகல்-காரணம் என்ன?
Women Asia Cup 2024: இந்தியாவின் ஷ்ரேயங்கா பாட்டீலுக்கு "இடது கையின் நான்காவது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது" என்று ACC வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Women's Asia Cup: மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடரில் இருந்து ஸ்ரேயங்கா பாட்டீல் விலகல்-காரணம் என்ன? (PTI)
இந்திய மகளிர் ஆஃப் ஸ்பின்னர் ஷ்ரேயங்கா பாட்டீல் இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இலங்கையின் தம்புல்லாவில் உள்ள ரங்கிரி தம்புல்லா சர்வதேச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை 2024 இன் 5 வது போட்டியில் இந்திய பெண்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெண்கள் அணிகள் மோதுகின்றன.
எலும்பு முறிவு
இதுகுறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஷ்ரேயங்காவுக்கு இடது கையின் நான்காவது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.