Team India Coach: இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவி! சச்சின் டென்டுல்கர், மோடி பெயர்களில் வந்த விண்ணப்பங்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதில் வேடிக்கையான விஷயமாக சச்சின் டென்டுல்கர், நரேந்திர மோடி ஆகியோரின் பெயர்களில் போலி அடையாளங்களுடன் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு சச்சின் டென்டுல்கர், மோடி பெயர்களில் வந்த விண்ணப்பங்கள் (PTI)
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான பிசிசிஐயின் காலக்கெடு மே 27ஆம் (திங்கள்கிழமை) தேதி முடிவடைந்தது. இதையடுத்து இந்த பதிவிக்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணங்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு விண்ணப்பங்கள் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் போன்ற போலி பெயர்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
ராகுல் டிராவிட் பயிற்சி காலம் நிறைவு
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது இருந்து வரும் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம், அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையுடன் நிறைவு பெறுகிறது. இதன் பிறகு இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் செயல்படுவார்.