IPL 2024: இருவரும் செய்த ஒரே தவறு! லக்னோ கேப்டன் கேஎல் ராகுல், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு அபராதம்
இந்த சீசனில் முதல் முறையாக ஐபிஎல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதற்காக இரு அணி கேப்டன்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இது நிகழ்ந்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்க்கு அபராதம் (AP)
ஐபிஎல் 2024 தொடரின் 34வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என சிறப்பாக செயல்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தோல்வி அடைந்த போதிலும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக, தோனியின் அதிரடி இன்னிங்ஸ் அமைந்திருந்தது. 9 பந்துகளில் 28 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்த அவர் தனது இன்னிங்ஸில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை அடித்தார்.
ருதுராஜ், கேஎல் ராகுலுக்கு அபராதம்
இந்த போட்டியில் குறித்த நேரத்தில் பந்து வீசாமல் போன காரணத்துக்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.