CSK vs RCB Preview: சிஎஸ்கேவின் பலம், ஆர்சிபிக்கு பலவீனம்! 16 ஆண்டு கால தவத்துக்கு மோட்சம் கிடைக்குமா?
16 ஆண்டு காத்திருப்புக்கு பின்னர் சேப்பாக்கத்தில் தோல்வியை தழுவி வரும் ஆர்சிபி அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த மோசமான பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். ஆனால் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு பலமாக இருக்கும் விஷயம், ஆர்சிபிக்கு பலவீனமாக இருந்து வருகிறது.

ஐபிஎல் திருவிழா இன்று முதல் கோலகலமாக தொடங்குகிறது. ஐபிஎல் 2024 சீசன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதுகின்றன. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
முதல் போட்டி என்பதால் வண்ணமயமான தொடக்க விழாவுக்கு பின்னர் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்வாட் தனது முதல் போட்டிகள் களமிறங்க இருக்கும் நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரரும், தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டனுமான டூ பிளெசிஸ் முதல் முறையாக சேப்பாக்கத்தில் எதிரணி கேப்டனாக களமிறங்க இருக்கிறார்.
16 ஆண்டுகள் காத்திருப்பு
சென்னை சேப்பாக்கத்தில் வைத்து ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியது. அதன் பிறகு சேப்பாக்கத்தில் விளையாடிய போட்டிகளில் தொடர்ச்சியாக 7 தோல்விகளை சந்தித்துள்ளது. இதையடுத்து அந்த தோல்வி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு ஆர்சிபி அணி களம் இறங்க இருக்கிறது. அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் 16 ஆண்டு கால காத்திருப்புக்கு முடிவு கிடைக்கும்.
