Rahul Dravid: பிசிசிஐ கூடுதலாக ரூ. 2.5 கோடி பரிசுத்தொகை..! மறுப்பு தெரிவித்த ராகுல் டிராவிட் - பின்னணி காரணம்
பிசிசிஐ கூடுதல் போனஸ் பரிசுத்தொகை பெற மறுப்பு தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், மற்ற ஆதரவு பணியாளர்கள் பெறும் ரூ. 2.5 கோடி மட்டுமே பரிசுத்தொகை பெறவுள்ளார்.

பிசிசிஐ கூடுதலாக ரூ. 2.5 கோடி பரிசுத்தொகைக்கு மறுப்பு தெரிவித்த ராகுல் டிராவிட்
இந்திய கிரிக்கெட் அணியின் 13 ஆண்டு கால ஐசிசி கோப்பை வறட்சியை போக்கியத்தில் முக்கிய பங்காற்றியவர் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட். சமீபத்தில் வெஸ்ட்இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 தொடரை வென்ற இந்திய அணி, இரண்டாவது டி20 கோப்பையை வென்று சாம்பியன் ஆனது.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இந்திய அணி வீரர்கள் மட்டுமன்றி, பயிற்சியாளர் உள்ளிட்ட இந்திய அணியின் ஆதரவு பணியாளர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் பிசிசிஐ பரிசு மழையை அறிவித்துள்ளது.
அதன்படி, டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் டிராவிட்டுக்கு அனைவருக்கும் அறிவித்த பரிசுத்தொகையுடன் கூடுதலாக ரூ. 2.5 கோடி போனஸ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.