HT Cricket Special: 30 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சச்சின் செய்த சம்பவம்! இன்றும் யாராலும் அசைக்க முடியாத சாதனை
சச்சின் என்கிற ரன் மெஷின் உருவாக காரணமாக இருந்த அந்த சம்பவம் 30 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் தான் நியூசிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் நிகழ்ந்தது. அந்த நிகழ்வின் பிளாஷ்பேக்கை பார்க்கலாம்

சச்சின் டென்டுல்கர் பேட்டிங்
இந்திய கிரிக்கெட்டின் கடவுள், ஜாம்பவான் வீரர், மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர் என கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில் பலரது பெயர்களால் அழைக்கப்பட்டவர் சச்சின் டென்டுல்கர். இப்பவும் அவரை அழைப்பதற்கு மேற்கூறிய பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்திய கிரிக்கெட்டில் ரன் மெஷினாக இருந்து வந்த சச்சின் டென்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு முதல் மைல்கல் சாதனைகளையும் நிகழ்த்தியவராக இருந்துள்ளார். இப்போது வரையில் அவரது அசைக்க முடியாத சாதனைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன.
சர்வதேச கிரிக்கெட்டில் டெல்ட், ஒரு நாள் சேர்த்து 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் ஒரே வீரராக சச்சின் டென்டுல்கர் இருந்து வருகிறார். அவ்வளவு எளிதாக யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாக இவரது இந்த சாதனை அமைந்துள்ளது.