Saurabh Netravalkar: வச்ச குறி தப்பல! கோலியை கோல்டன் டக்அவுட் ஆக்கியது எப்படி? கிடைத்த பாராட்டு - நேத்ராவல்கர் ஷேரிங்ஸ்
கோலியை கோல்டன் டக்அவுட் ஆக்கியது எப்படி என்பது குறித்த தெரிவித்துள்ள யுஎஸ்ஏ பவுலரான நேத்ராவல்கர், போட்டிக்கு பின் அவரிடம் கிடைத்த பாராட்டு குறித்தும் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தியுள்ளார்.

கோலி கோல்டன் டக்அவுட் ஆக்கியது எப்படி என்பதை பகிர்ந்த நேத்ராவல்கர் (PTI)
டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் குரூப் ஏ பிரிவில் யுஎஸ்ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் சூப்பர் 8 சுற்றுக்குள்ளும் நுழைந்தது.
குரூப் ஏ பிரிவில் சூப்பர் 8 சுற்றில் நுழைய இருக்கும் இரண்டாவது அணிக்கு யுஎஸ்ஏ, பாகிஸ்தான் அணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய நிலையில் யுஎஸ்ஏ புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக யுஎஸ்ஏ வெற்றி
முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி சமனின் முடிந்த நிலையில், சூப்பர் ஓவரில் யுஎஸ்ஏ வெற்றி பெற்று வரலாற்று சாதனை புரிந்தது. யுஎஸ்ஏ வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான செளரப் நேத்ராவல்கர் திகழ்ந்தார்.