Ind vs Can Abandoned: தொடர் மழை, ஈரப்பதம் மிக்க மைதானம்! ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்ட இரண்டாவது போட்டி
தொடர் மழை மற்றும் ஈரப்பதம் மிக்க மைதானம் காரணமாக இந்தியா - கனடா இடையிலான போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. லாண்டர்ஹில் மைதானத்தில் தொடர்ந்து இரண்டாவது போட்டி கைவிடப்பட்டுள்ளது.

தொடர் மழை, ஈரப்பதம் மிக்க மைதானம், லாண்டர்ஹில்லில் ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்ட இரண்டாவது போட்டி (AP)
டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் 33வது போட்டி குரூப் ஏ பிரிவில் இந்தியா - கனடா அணிகளுக்கு இடையே புளோரிடாவில் நடைபெற இருந்தது. டி20 போட்டியில் இந்த இரு அணிகளும் முதல் முறையாக நேருக்கு நேர் மோதும் போட்டியாக அமைந்திருந்தது.
இதையடுத்து போட்டி நடைபெறும் லாண்டர்கில் மைதானத்தில் தொடர் மழை காரணமாக அவுட்பீல்டிங் ஈரப்பதமுடன் காணப்பட்ட நிலையில், போட்டியானது ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இந்த மைதானத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்த யுஎஸ்ஏ - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து இன்று இந்தியா - கனடா அணிகளுக்கு இடையிலான போட்டியும் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் இங்கு நடைபெறாமல் போயுள்ளது.
