'பேரை கேட்டதும் அதிர்ந்த அரங்கம்'-ரூ.27 கோடிக்கு வாங்கிய LSG.. ஸ்ரேயாஸ் ஐயரை ஓவர்டேக் செய்த ரிஷப் பந்த்!
ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 ரூபாய்க்கு வாங்கப்பட்டு ரசிகர்களின் புருவத்தை உயர்த்த வைத்தார். ஆனால், அடுத்த 1 மணி நேரத்தில் ரிஷப் பந்த்தை அவரை ஓவர்டேக் செய்து சாதனை புரிந்தார். ரைட் டூ மேட்ச் கார்டை டெல்லி பயன்படுத்த முயன்றது. ஆனாலும், எல்எஸ்ஜே சொன்ன இறுதி தொகையை கேட்டு பின்வாங்கியது.

ரிஷப் பண்ட் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். அவரது தரமாபேட்டிங் பாணி, விக்கெட் கீப்பிங் திறன் மற்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கு பெயர் பெற்றவர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஐபிஎல் 2025 ஏலத்தில் ரிஷப் பந்த்தை ரூ.27 கோடிக்கு வாங்கியது. இந்திய ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் ஆனார் ரிஷப். ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 ரூபாய்க்கு வாங்கப்பட்டு ரசிகர்களின் புருவத்தை உயர்த்த வைத்தார். ஆனால், அடுத்த 1 மணி நேரத்தில் ரிஷப் பந்த்தை அவரை ஓவர்டேக் செய்து சாதனை புரிந்தார். ரைட் டூ மேட்ச் கார்டை டெல்லி பயன்படுத்த முயன்றது. ஆனாலும், எல்எஸ்ஜே சொன்ன இறுதி தொகையை கேட்டு பின்வாங்கியது. முன்னதாக, ஏலத்தில் ரிஷப் பந்த் பெயரை அறிவித்ததும், அங்கு பார்வையாளர்களாக வந்திருந்த ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இதனால், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் உற்சாகம் அடைந்தனர். அவரை வாங்கவும் போட்டி அதிகரித்தது. எதிர்பாராத டிவிஸ்ட் கொடுத்தது எல்எஸ்ஜி.
முழு பெயர்: ரிஷப் ராஜேந்திர பந்த்
பிறந்த தேதி: அக்டோபர் 4, 1997
