Kapil Dev:இவர்தான் ரியல் கேப்டன்! புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் முன்னாள் பயிற்சியாளர் - பென்ஷனை அளிக்க தயாரான கபில்தேவ்
டிராவிட்டுக்கு முன் இந்திய அணியின் தடுப்பு சுவராகவும், இந்தியாவுக்கு பல கோப்பைகளை வென்ற கொடுத்து புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் முன்னாள் பயிற்சியாளர் அன்சுமன் கெய்க்வாட் மருத்துவ தேவைக்கு நிதி திரட்ட முன் வைந்துள்ளார் கபில்தேவ். அவருக்காக பென்ஷனையும் அளிக்க தயார் என தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமாக இருந்தவர் அன்சுமான் கெய்க்வாட். புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் இவர் நிதி உதவி வேண்டி பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையடுத்து அவருடன் இணைந்து விளையாடியவரும், இந்திய அணிக்கு முதல் உலகக் கோப்பை பெற்று கொடுத்த கேப்டனுமான கபில்தேவ், முன்னாள் வீரர்களான மொஹிந்தர் அமர்நாத், சுனில் கவாஸ்கர், சந்தீப் பாடில், திலீப் வெங்சர்க்கார், மதன் லால், ரவி சாஸ்த்ரி, கிரிதி ஆசாத் உள்ளிட்டோருடன் இணைந்து அன்சுமன் கெய்வாட்க்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் இந்திய கிரிக்கெட் வாரியமும் கெய்க்வாட்டுக்கு வேண்டிய உதவிய தரும் என நம்புவதாக தெரிவித்தார்.
வலியை உணர்கிறேன்
இதுதொடர்பாக கபில்தேவ் பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "இது மிகவும் வருத்தமளிக்கிறது. நான் அன்ஷுவுடன் விளையாடியதால், நானும் அவரது வலியை உணர்கிறேன். அவரை இந்த நிலையில் பார்க்க சகிக்க முடியவில்லை. யாரும் இதுபோல் கஷ்டப்படக் கூடாது. வாரியம் அவரை கவனித்துக்கொள்ளும் என்று எனக்குத் தெரியும்
