IPL Throwback: ஐபிஎல் வரலாற்றில் 16 சீசன்கள் ஒரே அணி! அதிர்ச்சி தரும் கிங் கோலியின் முதல் சம்பளம் - எவ்வளவு தெரியுமா?
ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக தனது உடல், ஆன்மா, திறமை என அனைத்தையும் கொடுத்த வீரராக விராட் கோலி உள்ளார். ஆர்சிபி அணிக்காக தொடர்ந்து 16 சீசன்களின் விளையாடி வரும் கோலியின் அந்த அணிக்கு வந்தது எப்படி என்பதையும், அவரது முதல் சம்பளம் பற்றியை பிளாஷ்பேக்கையும் பார்க்கலாம்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2008 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 16 சீசன்கள் முடிவடைந்துள்ளன. ஐபிஎல் 2024 தொடர் 17வது சீசனாக மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதுகின்றன.
ஐபிஎல் போட்டியை திரும்பி பார்க்கையில் எண்ணற்றை சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதோடு, பல்வேறு மறக்க முடியாத சம்பவங்களும் நிகழ்வுகளும் நடந்துள்ளன. அந்த வகையில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாவிட்டாலும் அதிக ரசிகர்கள் கூட்டத்தையும், பாலோயர்களையும் கொண்ட அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு உள்ளது. அதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பவர் விராட் கோலி.
16 ஆண்டுகள் ஒரே அணியில்
கிங் கோலி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விராட் கோலி ஆர்சிபி என்று சுருக்கமாக கூறப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியில் 16 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியில் 16 ஆண்டுகள் வரை இருக்கும் ஒரே வீரராக விராட் கோலி தனித்துவ சாதனை படைத்துள்ளார்.