36 வருடத்திற்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து.. வொர்க் அவுட் ஆகாத ரோகித் பிளான்
பெங்களூருவில் இந்தியாவுக்கு எதிராக 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து 2வது இன்னிங்ஸில் விளையாடியது. தொடக்கத்தில் சற்று தடுமாற்றம் இருந்தாலும் அதன் பிறகு நிலையாக நின்று விளையாடி இலக்கை எட்டியது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து ஜெயித்தது.36 வருடத்திற்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து. அந்த அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக வந்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பெங்களூரில் தொடங்கியது. முதல் நாள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு இரண்டாவது நாளில் டாஸ் போடப்பட்டது. இந்தியா டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, யாருமே எதிர்பாராத வகையில் 46 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 31.2 ஓவர்களில் இந்தியா சரணடைந்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை குவித்தது நியூசிலாந்து.
இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, 462 ரன்களை குவித்தது. 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து 4 வது நாளான நேற்று தொடங்கியது. இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து இலக்கை எட்டி ஜெயித்தது. டாம் லாதம் ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தார். டெவன் கான்வே 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
வில் யங், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் நிதானமாக விளையாடி இலக்கை எட்ட முயன்றது. 2வது இன்னிங்ஸில் பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.