IND vs ENG 5th Test Day 2: இந்தியா சரவெடி ஆட்டம்.. 255 ரன்கள் முன்னிலை!
2வது நாள் முடிவில் குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் ஆட்டம் REUTERS/Adnan Abidi (REUTERS)
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 2வது நாள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 120 ஓவர்களில் 473 ரன்களை குவித்துள்ளது.
இங்கிலாந்தை விட 255 ரன்கள் முன்னிலையில் உள்ளது இந்தியா. கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சதம் பதிவு செய்தனர்.
தேவ்தத் படிக்கல், சர்ஃபராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதம் விளாசினார். கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜுரெல் 15 ரன்களிலும், ஜடேஜா 15 ரன்களிலும் நடையைக் கட்டினர். அஸ்வின் ரன்னின்றி நடையைக் கட்டினார். குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும், பும்ரா 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.